காங்கிரஸ் எம்.பி சசி தரூர் (Sasi Tharoor), ட்ரம்ப் சந்திப்புக்குப் பிறகு பிரதமர் மோடியைப் புகழ்ந்து பேசியுள்ளார். முன்னதாக ட்ரம்ப் மோடி பேச்சுவார்த்தை நடத்துவதில் தன்னை விட சிறந்தவர் எனப் பேசியிருந்தார்.
இதுகுறித்து சசி தரூர், “ட்ரம்ப் போன்ற ஒருவர் மோடி தன்னை விட நன்றாக பேச்சுவார்த்தை நடத்துபவர் எனக் கூறுவது கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. இதை மோடி அவரது கணக்கில் வைத்துக்கொள்ளலாம்” எனப் பேசியிருந்தார்.
மேலும், சட்டத்துக்குப் புறம்பாக குடியேறிய இந்தியர்களை சங்கிலிகள் போட்டு வெளியனுப்புவது குறித்து மோடி திரைமறைவில் பேசியிருக்கலாம் என்றும் சசி தரூர் கூறியிருக்கிறார். மோடி – ட்ரம்ப் சந்திப்பு ஊக்கமளிப்பதாக உள்ளதாகவும், பெரிய பிரச்னைகள் பேசப்பட்டுள்ளதாகவும் சசி தரூர் பேசியுள்ளார்.

