இந்நிலையில், நேற்று (பிப்.15) காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மோரேனாவின் கோட்வால் அணைப் பகுதியில் சிறுவனைக் கடத்திய ராஹுல் குர்ஜார் (வயது 28) மற்றும் பண்டீ குர்ஜார் (35) ஆகியோரைத் தேடிச் சென்றனர். அப்போது, போலீஸாரை நோக்கி அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். அதற்கு, காவல் துறையினர் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் மீதும் குண்டுகள் பாய்ந்துள்ளது.
பின்னர், அவர்கள் கைது செய்யப்பட்டு தற்போது மோரேனா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த கடத்தலில் மேலும் இருவருக்கு தொடர்புள்ளதாக அவர்கள் கூறியதைத் தொடர்ந்து அவர்களை பிடிக்கும் நடவடிக்கையில் அம்மாநில காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனமும் ஓரு நாட்டுத் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

