“வங்கியின் தற்போதைய பணப்புழக்க நிலையைக் கருத்தில் கொண்டு, சேமிப்பு அல்லது நடப்புக் கணக்குகள் அல்லது ஒரு வைப்புத்தொகையாளரின் வேறு எந்தக் கணக்கிலிருந்தும் எந்தவொரு தொகையையும் எடுக்க அனுமதிக்கக் கூடாது என்று நியூ இந்தியா கூட்டுறவு வங்கிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக” ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது.
இதுபோன்ற சூழலில் நுகர்வோரின் நலன்களைப் பாதுகாக்க, ரிசர்வ் வங்கி வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்தை (DICGC) தொடங்கியுள்ளது. இது ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்யும் தொகைக்கு பாதுகாப்பை வழங்குகிறது. ஒரு நிதி நிறுவனம் அல்லது வங்கி திவாலானால், அந்த வங்கியில் உள்ள வாடிக்கையாளர்களின் பணமும் ஆபத்தை எதிர்கொள்கிறது. இந்த ஆபத்திலிருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாக்கவே, ரிசர்வ் வங்கி DICGC ஐ கொண்டு வந்துள்ளது.
DICGC என்றால் என்ன?
இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகளின் கிளைகள், உள்ளூர் வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளும் DICGC ஆல் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு வாடிக்கையாளருக்கு ரூ.5 லட்சம் வரையிலான வைப்புத்தொகை காப்பீடு கிடைக்கிறது. இதன் பொருள் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ரூ.5 லட்சம் வரையிலான முழுப் பணமும் திரும்ப கொடுக்கப்படும். ஆனால் ஒரு வைப்புத்தொகையாளர் வங்கியில் ரூ.5 லட்சத்திற்கு மேல் வைத்திருந்தாலும், அவருக்கு ரூ.5 லட்சம் வரை மட்டுமே கிடைக்கும்.
DICGC அதிகபட்சமாக ஐந்து லட்சம் ரூபாய் வரை அசல் மற்றும் வட்டியை காப்பீடு செய்கிறது. உதாரணமாக, ஒரு தனிநபரின் கணக்கில் அசல் தொகை 4,95,000 மற்றும் திரட்டப்பட்ட வட்டி 4,000 இருந்தால், DICGC காப்பீடு செய்யும் மொத்த தொகை 4,99,000 ஆக இருக்கும். இருப்பினும், அந்தக் கணக்கில் அசல் தொகை ஐந்து லட்சமாக இருந்தால், திரட்டப்பட்ட வட்டி காப்பீடு செய்யப்படாது. ஏனெனில் அது வட்டி என்பதால் அல்ல; அது காப்பீட்டு வரம்பை விட அதிகமான தொகை என்பதால்.
இதையும் படிங்க: உங்கள் கிரெடிட் கார்டு புள்ளிகளை எவ்வாறு மீட்டெடுப்பது…? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 3 வழிகள்…
ஒரே வங்கியில் ஒரே மாதிரியான உரிமையில் வைத்திருக்கும் அனைத்து நிதிகளும் வைப்புத்தொகை காப்பீடு தீர்மானிக்கப்படுவதற்கு முன்பு ஒன்றாக சேர்க்கப்படும். நிதிகள் வெவ்வேறு வகையான உரிமையில் இருந்தால் அல்லது தனித்தனி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால் அவை தனித்தனியாக காப்பீடு செய்யப்படும். சுருக்கமாக சொன்னால், ஒரு நபருக்கு வெவ்வேறு உரிமையில் ஒரே வங்கியில் நான்கு வெவ்வேறு வைப்புதொகை கணக்குகள் இருந்தால், அனைத்தும் தனித்தனியாக காப்பீடு செய்யப்படும்.
உங்கள் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க தவிர்க்க வேண்டிய தவறுகள்:
முதலாவதாக, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அல்லது பஞ்சாப் நேஷனல் வங்கி போன்ற புகழ்பெற்ற மற்றும் பெரிய வங்கிகளில் மட்டுமே மக்கள் வங்கிச் சேவைகளைச் செய்வது நல்லது. சிறிய கூட்டுறவு வங்கிகளைத் தவிர்ப்பது நல்லது. இரண்டாவதாக, உங்களிடம் ரூ.7 லட்சம் ரொக்கம் இருந்தால், ரூ.2 லட்சத்தை உங்களிடம் வைத்துக்கொண்டு மீதமுள்ள ரூ.5 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்வது நல்லது. மேலும், உங்கள் கணக்கில் ரூ.5 லட்ச வரம்பிற்குள் பணத்தை வைத்திருப்பது நல்லது. தேவை ஏற்பட்டால் உங்கள் குடும்ப உறுப்பினரின் கணக்கையும் பயன்படுத்தலாம்.
February 15, 2025 2:51 PM IST
உங்கள் வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்கிறீர்களா? இந்த தவறை செய்தால் உங்கள் பணத்தை இழக்க நேரிடும்…

