02
இதுபோன்ற திட்டங்கள், ஒவ்வொரு பெண்ணும் தன் சொந்தக் காலில் நிற்க உதவுகிறது. பொதுவாக, ஒரு தொழிலைத் தொடங்க பணம் தேவைப்படுகின்றது. ஆனால், இதற்கு அதிக வட்டி விகிதங்கள் ஒரு சுமையாக இருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலையில், மத்திய அரசு பெண்களுக்காகவே ‘லக்பதி திதி யோஜனா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பெண்களை கோடீஸ்வரர்களாக மாற்றும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


