February 15, 202511:15 AM IST
Tamil Live Breaking News : முதலமைச்சர் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்பு!
மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணிக்க மாநில அளவில் வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA குழு) முதலமைச்சரை தலைவராக கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, துரை வைகோ, சுப்பராயன், மாணிக்கம் தாகூர், உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். அதிமுக சார்பில் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார்.

