Last Updated:
பெங்களூரு அணி குஜராத் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி WPL தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றது. ரிச்சா கோஷ் 64 ரன்கள், எல்லீசி பெரி அரைசதம்.
நடப்பாண்டின் மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் குஜராத் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
2023 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளைப் போலவே வீராங்கனைகளுக்காக WPL போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பெங்களூரு, குஜராத், மும்பை, டெல்லி, உத்தரப்பிரதேசம் என 5 அணிகள் இந்தாண்டு தொடரில் மோதுகின்றன. வதோதராவில் நடைபெற்ற முதல் போட்டியில் குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீசியது.
குஜராத் அணி சார்பில் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் அதிகபட்சமாக 79 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. 202 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பெங்களூரு அணியில், விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் அபாரமாக விளையாடி அதிகபட்சமாக 64 ரன்கள் எடுத்தார்.
எல்லீசி பெரியின் அரைசதமும் அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தியது. 9 பந்துகள் மீதம் இருக்கும்போதே, 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, வெற்றிக்குத் தேவையான 202 ரன்களை எட்டி, நடப்பு சாம்பியனான பெங்களூரு அணி, வெற்றிக் கணக்கைத் தொடங்கியுள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
February 15, 2025 7:34 AM IST


