Last Updated:
இயற்கைக்கு மாறான உடலுறவால் ஏற்பட்ட மலக்குடல் காயங்களால் பாதிக்கப்பட்டு மனைவி உயிரிழந்த வழக்கில் கைதான கணவரை விடுவித்து சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு ஆணுக்கும் அவரது வயது வந்த மனைவிக்கும் இடையிலான இயற்கைக்கு மாறான உடலுறவு தண்டனைக்குரிய குற்றம் இல்லை என்று சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு, மனைவியின் அனுமதியின்றி, கணவர் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மனைவி உயிரிழந்தார். இந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்து வந்தது.
பாதிக்கப்பட்டவரின் ‘ஆசனவாயில்’ கணவர் தனது கையைச் செருகியதாகவும், அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் வலி இருப்பதாக புகார் அளித்ததாகவும், பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, அந்த மனைவியைக் காப்பாற்ற முடியவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அந்த பெண்ணுக்கு பெரிட்டோனிடிஸ் மற்றும் மலக்குடலில் துளை இருந்ததாக மருத்துவர் கூறினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனைவி 15 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், கணவரால் செய்யப்படும் “எந்தவொரு பாலியல் உடலுறவு” அல்லது பாலியல் செயலையும் எந்த சூழ்நிலையிலும் பாலியல் வன்கொடுமை என்று கூற முடியாது என்று தீர்ப்பில் கூறியுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம், இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு மனைவியின் ஒப்புதல் இல்லாததும் தண்டனைக்குரிய குற்றமில்லை என்றாகிறது.
இதையும் படிக்க: மார்சேயில் தரையிறங்கியவுடன் சாவர்க்கருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி
மேலும் “பிரிவு 375, 376 மற்றும் 377 IPC ஐப் பார்க்கும்போது, பிரிவு 375 IPC இன் திருத்தப்பட்ட வரையறையின் அடிப்படையில், கணவன்-மனைவி இடையேயான பிரிவு 377 இன் கீழ் குற்றத்திற்கு இடமில்லை. அத்தகைய பாலியல் வன்கொடுமையை நிரூபிக்க முடியாது” என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியாவில் திருமண பாலியல் வன்கொடுமை தண்டனைக்குரிய குற்றமல்ல என்றாலும், இந்தத் தீர்ப்பு இயற்கைக்கு மாறான உடலுறவையும் தண்டனையின் வரம்பிலிருந்து விலக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
February 12, 2025 6:25 PM IST
மனைவியின் சம்மதம் இல்லாமல் ‘இயற்கைக்கு மாறான உடலுறவு’ தண்டனைக்குரியதல்ல : சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம்


