Last Updated:
முகேஷ் அம்பானியுடன் அவரது தாயார் கோகிலா பென் அம்பானி மகன்கள் ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி, மருமகள்கள் ஸ்லோகா, ராதிகா மெர்ச்சென்ட் உள்ளிட்டோர் புனித நீராடினர்.
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் புனித நீராடினார்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரக்யாராஜில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறை கடந்த மாதம் 12-ஆம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது. இம்மாதம் 26-ஆம் தேதி வரை தொடர்ந்து 45 நாட்களுக்கு இந்த கும்பமேளா நடைபெறும். இதனையொட்டி உத்தரப்பிரதேச மாநிலத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
அவர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி தங்களது சடங்குகளை நிறைவேற்றுகிறார்கள். அரசு அளித்த தகவலின் படி கும்பமேளா தொடங்கிய 29 நாட்களில் சுமார் 45 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் இன்று பிரயாக்ராஜுக்கு வருகை தந்து மகா கும்பமேளாவில் திருவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
முகேஷ் அம்பானியுடன் அவரது தாயார் கோகிலா பென் அம்பானி மகன்கள் ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி, மருமகள்கள் ஸ்லோகா, ராதிகா மெர்ச்சென்ட் உள்ளிட்டோர் புனித நீராடினர். ஹெலிகாப்டர் மூலமாக பிரயாக்ராஜுக்கு வந்த முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் அங்கிருந்து திருவேணி சங்கமத்திற்கு கார் மூலமாக சென்றனர்.
#WATCH | Reliance Industries chairman Mukesh Ambani along with his son Anant Ambani arrives in Prayagraj to attend Mahakumbh pic.twitter.com/NauwYt5voy
— ANI (@ANI) February 11, 2025
முன்னதாக ஏராளமான விஐபிகள் மகா கும்ப மேளாவில் திருவேணி சங்கமத்தில் புனித நீராடினார்கள். அவர்களில் குடியரசு தலைவர், திரௌபதி பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் குறிப்பிடத்தக்கவர்கள்.
February 11, 2025 7:01 PM IST
Mahakumbhmela : மகாகும்பமேளாவுக்கு குடும்பத்தினருடன் முகேஷ் அம்பானி வருகை.. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்


