பீஜிங்: சீனாவின் தென் மேற்கு பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்; மாயமான 28 பேரை மீட்கும்பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.
நம் அண்டை நாடான சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிங்பிங் கிராமத்தில், நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதை தொடர்ந்து, அப்பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது.

