மகா கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜ் சுற்றுப்பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களில் போதுமான இடவசதி இல்லாததால் ரயிலும் என்ஜினில் பயணிகள் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. பெளஷ பெளர்ணமியையொட்டி ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு, பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வருகை தருவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஒட்டுமொத்த அரசு துறைகளும் திணறி வருகின்றன.

