• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

நைஜீரியாவில் பிணைக் கைதிகளாக இருந்த 300 பள்ளி மாணவர்கள் விடுவிப்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
March 25, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
நைஜீரியாவில் பிணைக் கைதிகளாக இருந்த 300 பள்ளி மாணவர்கள் விடுவிப்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அபுஜா:

இம்மாத தொடக்கத்தில் நைஜீரியாவின் வடக்குப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் துப்பாக்கிக்காரர்களால் கடத்தப்பட்டனர்.

பிணைக் கைதிகளாக இருந்த அவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக நைஜீரிய அரசாங்கம் நேற்று (மார்ச் 24ஆம் தேதி) தகவல் வெளியிட்டது.

மார்ச் 7ஆம் தேதி குரிகா என்னும் இடத்தில் 287 பள்ளி மாணவர்களும் சில ஆசிரியர்களும் துப்பாக்கிக்காரர்களால் கடத்தப்பட்டனர்.

பிணையில் இருப்பவர்களை விடுவிக்க கிட்டத்தட்ட 100,000 வெள்ளி தர வேண்டும் என்று துப்பாக்கிக்காரர்கள் நைஜீரிய அரசாங்கத்தை மிரட்டினர்.

இந்தச் சம்பவம் நைஜீரியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த நாட்டில் இவ்வளவு பெரிய அளவில் ஆட்கடத்தல் சம்பவம் இடம்பெற்றது இதுவே முதல்முறை.

இந்நிலையில் துப்பாக்கிக்காரர்கள் கொடுத்த கெடு முடிவதற்குள் மாணவர்களும் ஆசிரியர்களும் எந்த பாதிப்பும் இல்லாமல் மீட்கப்பட்டனர்.

மாணவர்கள் காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டதாகவும் தற்போது அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு மாணவர்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

நைஜீரியாவில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் போக்கோ ஹராம் என்னும் பயங்கரவாத அமைப்பு முதல் முறையாக பள்ளி மாணவர்களை குறிவைத்து ஆட்கடத்தலில் ஈடுபட்டது.

அதைத் தொடர்ந்து நைஜீரியாவில் உள்ள சட்டவிரோத அமைப்புகளும் இதே பாணியில் மாணவர்களைக் கடத்தி அரசாங்கத்தை மிரட்டி வரும் போக்கு அதிகரித்தது.



Read More

Previous Post

ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு: 5-வது முறை அதிபரானதற்கு வாழ்த்து | PM Modi phone conversation with Russian President Putin

Next Post

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மை: மைத்திரியிடம் சஜித் விடுத்த வேண்டுகோள்

Next Post
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மை: மைத்திரியிடம் சஜித் விடுத்த வேண்டுகோள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மை: மைத்திரியிடம் சஜித் விடுத்த வேண்டுகோள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin