
ஆம் ஆத்மியின் உயர்மட்டத் தலைவர்களுக்கு எதிரான அதிருப்தி, ஊழல் குற்றச்சாட்டுகள் ஆகியவை பாஜகவின் வெற்றிக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
ஆம் ஆத்மி கட்சி சார்பில், தேர்தலுக்கு முன் அதிஷி முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தாலும், ஆம் ஆத்மி வெற்றி பெற்றிருந்தால், அரவிந்த் கெஜ்ரிவாலே முதலமைச்சராகப் பதவியேற்பார் எனக் கூறப்பட்டது. ஆனால் முதலமைச்சர் வேட்பாளர் யாரும் முன்னிறுத்தப்படாமலேயே டெல்லி தேர்தலைச் சந்தித்தது பாஜக.
தற்போது பாஜக முன்னிலை பெற்றிருக்கும் நிலையில், முதலமைச்சராக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. முதலமைச்சராகப் பின்வருபவர்கள் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
1. பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா
முன்னாள் எம்.பி.யான பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலைப் புது தில்லி தொகுதியில் வென்றுள்ளார். முன்னாள் டெல்லி முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன் வர்மா, கெஜ்ரிவாலைத் தோற்கடித்ததால் நிச்சயம் முக்கியப் போட்டியாளராக இருப்பார்.
2. ரமேஷ் பிதுரி
சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காகச் செய்திகளில் இடம்பிடித்த பாஜகவின் ரமேஷ் பிதுரி, டெல்லி முதலமைச்சராகும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
3. பன்சூரி ஸ்வராஜ்
முதல் முறையாக எம்.பி.யாகவும், மூத்த பாஜக தலைவரின் மகளாகவும் இருக்கும் பன்சூரி ஸ்வராஜ், முதல்வர் பதவிக்கான போட்டியாளர்களில் ஒருவராக உள்ளார். ஒரு காலத்தில் அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் எல்.கே. அத்வானி ஆகியோர் வெற்றி பெற்ற புது தில்லி மக்களவைத் தொகுதியில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
4. ஸ்மிருதி இரானி
2019 மக்களவைத் தேர்தலில் அமேதியில் ராகுல் காந்தியைத் தோற்கடித்து கவனத்தை ஈர்த்த ஸ்மிருதி இரானி, டெல்லியில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வந்தார். இரானிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், அவர் நகரில் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார், இதனால் அவர் முதல்வர் பதவிக்கான போட்டியாளராக மாறியுள்ளார்.
5. துஷ்யந்த் கவுதம்
பாஜகவின் தேசியப் பொதுச் செயலாளரும் தலித் தலைவருமான துஷ்யந்த் கவுதமும் முதல்வர் பதவிக்கான முன்னணி வேட்பாளர்களில் ஒருவராக உள்ளார். கரோல் பாக் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் விஷேஷ் ரவிக்கு எதிராக அவர் போட்டிட்டுள்ளார்.
February 08, 2025 1:09 PM IST

