வாக்கு எண்ணும் பணிகள் தீவிரம்
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் பெருந்துறை அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட்டு வருகின்றது. மொத்தம் 14 மேசைகளில் வாக்கு எண்ணும் பணியில் 51 பேர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான நூற்றுக்கணகான போலீசார் பாதுகாப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிந்த நிலையில், தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 9058 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 1994 வாக்குகளை பெற்று பின்னடைவை சந்தித்து உள்ளார்.

