கோத்தா திங்கி:
கோத்தா திங்கியில் விடியற்காலையில் பெய்த பலத்த மழையால் இங்குள்ள மூன்று குடியிருப்பு பகுதிகளில் இன்று அதிகாலை திடீர் வெள்ளம் ஏற்பட்டது, இதன்காரணமாக சுமார் 70 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அங்குள்ள தற்காலிக தங்குமிடங்களுக்கு அனுப்பப்பட்டனர். அதேநேரம் அங்குள்ள முக்கிய சாலை வெள்ளத்தில் மூழ்கியது.
கம்போங் பாரு சுங்கை மாஸ், தாமான் தேசாரு உத்தாமா மற்றும் தாமான் பெனாவர் ஹார்மோனி ஆகிய இடங்களில் உள்ள பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உயரமான பகுதிக்கு மாற்றப்பட்டனர்.


