கோலாலம்பூர்:
கெப்போங்கில் இன்று அதிகாலை 12 மணியளவில், கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை அமலாக்க அதிகாரிகள் 40 பேர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில், வங்காளதேசம், மியன்மார், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த மொத்தம் 64 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.


இந்த நடவடிக்கையில் சட்ட அமலாக்க அதிகாரிகள் மொத்தம் 136 பேரை சோதனை செய்ததாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் 54 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் அடங்குவர் என்றும், அதில் 3 பேர் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்றவர்கள் 2 வியட்நாமியர்கள், 56 மியன்மார் நாட்டவர்கள் மற்றும் 3 பாகிஸ்தானியர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கைது செய்யப்பட்டவர்கள் குடிநுழைவுத் துறை 1959/63 குடிவரவுச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை விசாரித்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.


