Last Updated:
சசியின் குழந்தைகளான உதயகுமார், ராகுல் மற்றும் ரேணுகாவை பவன் அவ்வப்போது அடித்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
ஆந்திராவில் 3 குழந்தைகளை, தாயின் காதலர் செல்போன் சார்ஜர் வயரால் கொடூரமாக தாக்கிய சம்பவம் நெஞ்சை துடிதுடிக்க வைத்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டம் ஜங்காரெட்டி கூடத்தை சேர்ந்த சசி என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, தனது 3 குழந்தைகளுடன் அதே ஊரில் வசிக்கும் பவனுடன் வாழ்ந்து வருகிறார். சசியின் குழந்தைகளான உதயகுமார், ராகுல் மற்றும் ரேணுகாவை பவன் அவ்வப்போது அடித்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், செல்போன் சார்ஜர் வயரை பயன்படுத்தி 3 குழந்தைகளையும் பவன் கடுமையாக தாக்கியுள்ளார். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தைகளின் உடம்பில் காயம் இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த சில நாட்களாக, பவன் தங்களை கடுமையாக தாக்கியும், அந்த காயத்தின் மீது மிளகாய் பொடியை தூவியும் வந்தததாக குழந்தைகள் வேதனையுடன் தெரிவித்தனர். தங்களின் தாய் ஒன்றும் செய்ய முடியாமல் தவிப்பதாகவும் குழந்தைகள் கூறினர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக, பவனை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
February 03, 2025 5:20 PM IST


