
Last Updated:
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ரூ. 12 லட்சம் வரையிலான வருமான வரி விலக்கை நேரு காலத்துடன் பிரதமர் மோடி ஒப்பிட்டுப் பேசினார்.
இந்தப் பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்பாக ரூ. 12 லட்சம் வரை வருமான வரி விலக்களிக்கப்பட்டுள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பிரதமர் மோடி நேரு காலத்தில் ரூ. 12 லட்சம் வருமானம் ஈட்டி வரி கட்டுவதையும், தற்போது ரூ. 12 லட்சம் வருமானம் ஈட்டுவதையும் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.
டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, “இது மக்களுக்கான பட்ஜெட், நடுத்தர வர்க்கத்தினருக்கான பட்ஜெட். பாஜக நடுத்தர வர்க்கத்தினர், நேர்மையாக வரி செலுத்துபவர்களை மதிக்கும் கட்சி. இந்த பட்ஜெட் மூலம், நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவது எளிதாக இருக்கும்.
நேரு ஆட்சிக் காலத்தில் நீங்கள் ரூ. 12 லட்சம் சம்பாதித்தால், அதில் நான்கில் ஒரு பங்கை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டி இருந்திருக்கும். இந்திரா காந்தி ஆட்சியில் ரூ. 12 லட்சம் சம்பாதித்தால் ரூ. 10 லட்சத்தை வரியாக கட்டியிருப்பீர்கள். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரூ. 12 லட்சம் சம்பாதித்தால் ரூ. 2,60,000 வரி கட்ட வேண்டியிருக்கும். ஆனால், தற்போது பாஜகவின் இந்த பட்ஜெட்டிற்குப் பிறகு நீங்கள் ரூ. 12 லட்சம் சம்பாதித்தால் வரியே கட்ட வேண்டாம்.
காங்கிரஸ் கட்சி தங்களின் சொந்த கஜானாவை வரிப் பணத்தால் நிரப்ப நினைத்தது. ஆனால், பாஜக மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அக்கறை காட்டியுள்ளது” என்று பேசினார்.
February 03, 2025 9:02 PM IST

