எடப்பாடி பழனிசாமி சொன்னது என்ன?
இந்த விவகாரம் தொடர்பாக ’யார் அந்த சார்கள்?’ என ’எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து இருந்தார். அதில், சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில், சினிமா காட்சிகளைக் காட்டிலும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற காட்சி நெஞ்சை பதைக்க வைக்கிறது.

