Last Updated:
பிரபல தொழில்முனைவோரும் முதலீட்டாளருமான பிரசாந்த் பிரகாஷுக்கு, வர்த்தகம், தொழில் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான அவரது தனித்துவமான பங்களிப்புகளுக்காக சமீபத்தில் மதிப்புமிக்க பத்மஸ்ரீ விருது மத்திய அரசால் வழங்கப்பட்டது.
சமீபத்தில் வணிகம், விளையாட்டு, கலாச்சாரம், சுற்றுச்சூழல், கலை, கல்வி, மருத்துவம் போன்ற பல துறைகளில் சிறப்பாக பங்களிப்பு செய்த நபர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கி இந்திய அரசு கௌரவித்தது. இந்தப் பட்டியலில் பல தொழில் அதிபர்களும் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் ஒருவரைப் பற்றி இப்போது தெரிந்துகொள்ளலாம்.
பிரபல தொழில்முனைவோரும் முதலீட்டாளருமான பிரசாந்த் பிரகாஷுக்கு, வர்த்தகம், தொழில் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான அவரது தனித்துவமான பங்களிப்புகளுக்காக சமீபத்தில் மதிப்புமிக்க பத்மஸ்ரீ விருது மத்திய அரசால் வழங்கப்பட்டது. ஆக்செல் இந்தியாவின் (Accel India) நிறுவனராக இருக்கும் பிரகாஷ், ஃப்ளிப்கார்ட், ஸ்விக்கி மற்றும் புக்மைஷோ போன்ற வெற்றிகரமான ஸ்டார்ட்அப்களின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளார். அவரது பணி மில்லியன் கணக்கான வேலைகளை உருவாக்கியது மட்டுமல்லாமல், கல்வி, சுகாதாரம் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற துறைகளில் உள்ள குறிப்பிடத்தக்க சமூக சவால்களை கவனப்படுத்தியுள்ளது.
இவரது முயற்சிகள் நாட்டை புதுமை மற்றும் தொழில் முனைவோர் மையமாக மாற்ற உதவியது. இவருடைய ஆக்செல் இந்தியா, இன்ஃப்ரா.மார்க்கெட் (Infra.Market), ப்ளூஸ்டோன் (Bluestone) மற்றும் அர்பன் கம்பெனி (Urban Company) உட்பட பல வெற்றிகரமான நிறுவனங்களை ஆதரித்து, அந்நிறுவனங்கள் வளர்வதற்கு உறுதுணையாக இருந்துள்ளது. இந்த நிறுவனங்கள் தற்போது வரை மில்லியன் கணக்கானவர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது.
பிரகாஷின் செல்வாக்கு வணிக உலகத்திற்கு அப்பாற்பட்டது. அவர் கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவின் ஆலோசகராகவும் பணியாற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரது தொழில் முனைவோர் வெற்றியை தாண்டி, பிரகாஷ் முக்கியமான சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ACT கிராண்ட்ஸ், Unboxing BLR அறக்கட்டளை மற்றும் ஷிக்ஷா அறக்கட்டளை போன்ற நிறுவனங்களுடனான தனது ஒத்துழைப்பின் மூலம், அவர் இந்தியாவில் கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் பணியாற்றியுள்ளார்.
இந்த கௌரவத்திற்கு நன்றி தெரிவித்த பிரகாஷ், “இந்திய அரசால் பத்மஸ்ரீ விருதை பெற்றதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த அங்கீகாரம் தேசத்தை கட்டியெழுப்புவதில் ஸ்டார்ட்அப்கள் மற்றும் தொழில்நுட்பத் துறையின் முக்கிய பங்கை எடுத்துக்காட்டுகிறது. இந்த விருதை என்னுடன் பணியாற்றிய சக ஊழியர்கள் மற்றும் இந்தியாவின் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்த அயராது உழைத்த அனைவரின் சார்பாகவும் நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று பணிவாக கூறியுள்ளார்.
தொழில்துறை வளர்ந்தால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைத்தால் நாடும் முன்னேறும். இவரைப் போன்ற தொழிலதிபர்களே நாட்டின் முன்னேற்றத்தை வழிநடத்துபவர்களாக உள்ளார்கள்.
February 01, 2025 2:25 PM IST
ஃப்ளிப்கார்ட், ஸ்விகி, புக் மை ஷோ போன்றவற்றின் வெற்றிக்கு காரணமானவர்.. மில்லியன் கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியவர்.. யார் அவர்?


