
ஒரு தனிநபரின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக தனிநபர் கடன்கள் அதாவது, பர்சனல் லோன்கள் வழங்கப்படுகின்றன. அதேபோல், வணிகம் சார்ந்த நிதி தேவைகளுக்கு வங்கிகள் அல்லது பிற நிதி நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயரில் அல்லது அதன் உரிமையாளரின் பெயரில் தொழிற் கடன்களை வழங்குகின்றன.
தொழில் கடன்கள் பொதுவாக, பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம். உதாரணமாக, தொழில் சார்ந்த உபகரணங்களை வாங்குதல், பணி மூலதனத்தை நிர்வகித்தல், தொழில் விரிவாக்கம், சரக்கு அல்லது பிற செயல்முறைகளுக்கு நிறுவனங்கள் இந்த கடன் தொகையை பயன்படுத்தலாம். மேலும் குறிப்பாக, கடன் தொகைகள், வட்டி விகிதம் மற்றும் தகுதி ஆகியவை கடன் வழங்குபவரை பொறுத்து மாறுபடும்.
வணிகக் கடன் அல்லது தொழில் கடன் என்றால் என்ன?
குறிப்பிட்ட தொழிலை மேம்படுத்த அல்லது நஷ்டத்தில் இருக்கும் நிறுவனத்தை மீட்டெடுத்து மீண்டும் புதிய நிலைக்கு கொண்டுவர, சம்பந்தப்பட்ட நிறுவனம் வங்கி அல்லது மற்ற நிதி நிறுவனங்களில் பெறும் கடன் தொகை ஆகும். அதே நேரத்தில் புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களின் முதலீட்டுக்காகவும் தொழில் கடன்கள் வழங்கப்படுகின்றன. பெரும்பாலும், தொழில் வளர்ச்சிப் பாதையில் செல்லும் பட்சத்தில் இந்தக் கடன்கள் குறைந்த வட்டி விகிதங்களில் வழங்கப்படுகின்றன. மேலும் இந்த கடன், சம்பந்தப்பட்ட தொழிலில் இருந்து பெறப்படும் வருவாயிலிருந்து திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.
தனிநபர் கடன் VS தொழில் கடன்?
தனிநபர் கடனுக்கும், தொழிற் கடனுக்கும் இடையே ஒரு சில ஒற்றுமைகள் இருந்தாலும், பொதுவாக இரண்டுமே வேறுபட்டவை. தனிநபர் கடன் என்பது மருத்துவச் செலவுகள், கல்வி அல்லது வீட்டு மேம்பாடு போன்ற ஒருவரின் அத்தியாவசிய நிதித் தேவையை பூர்த்தி செய்யும்விதமாக தனிநபர் பெறும் கடனாகும். பொதுவாக தனிநபர் கடனுக்கென எந்த பிணையமும் வழங்க தேவையில்லை என்பதால், இதை பாதுகாப்பற்ற கடன் என்று குறிப்பிடுகிறார்கள்.
இதையும் படிக்க: யுபிஐ ஐடியுடன் கிரெடிட் கார்டை இணைப்பது சரியான அணுகுமுறையா…?
அதிக வட்டி விகிதம்
வணிகக் கடனை பெற முடியாவிட்டால், ஒருவர் தனது வணிகத் தேவைகளுக்காக, தனிநபர் கடனைப் பயன்படுத்தலாம் என்றாலும், தனிநபர் கடன்கள் பொதுவாக அதிக வட்டி விகிதங்களைக் கொண்டிருக்கும். அதுமட்டுமின்றி, வணிகக் கடனுக்கு தேவையான கடன் தொகையை தனிநபர் கடனின் மூலம் பெற முடியாது.
ஏனெனில், தனிநபர் கடன் என்பது பொதுவாக குறைவான தொகையையே கொண்டிருக்கும். எனவே, வணிக நோக்கங்களுக்காக ஒருவர் தனிநபர் கடனைப் பயன்படுத்த முடியும் என்றாலும், வணிகக் கடனை பெறுவதே சிறந்த வழி. வணிகக் கடன்கள் அதன் தன்மைக்கு ஏற்ப சில விதிமுறைகளுடன் வருகின்றன.
இதையும் படிக்க: தனிநபர் கடன் விரைவாகவும், எளிதாகவும் கிடைக்க வேண்டுமா…? இதோ உங்களுக்கான டிப்ஸ்…!
தொழிலுக்காக தனிநபர் கடனைப் பயன்படுத்துவதன் நன்மைகள்
தொழிலில் முதலீடு செய்ய தனிநபர் கடனை பயன்படுத்துவதன் சில நன்மைகளை இங்கே பார்ப்போம்.
- உடனடி அணுகல்: தொழிற் கடன்களுடன் ஒப்பிடும்போது, தனிநபர் கடன்கள் உடனடியாக வழங்கப்படுகின்றன. எனவே, தொழிலுக்கு அவசரமாக பணம் தேவைப்படும் பட்சத்தில், இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம்.
- பாதுகாப்பற்ற கடன்: தனிநபர் கடனை பெறுவதற்கு கடன் வாங்குபவர் தனது சொத்துக்கள் போன்ற எதையும் பிணையமாக கொடுக்க வேண்டிய அவசியமில்லை. எனவே, இதை பாதுகாப்பற்ற கடன் என்கிறார்கள்.
- எளிய செயல்முறை: பொதுவாக நல்ல கிரெடிட் ஸ்கோர் உள்ள நபர்கள், வணிகக் கடன்களைவிட தனிநபர் கடன்களுக்கு விண்ணப்பிப்பது பெரும்பாலும் எளிதானது. ஏனெனில், அவை அதிக வரம்பைக் கொண்டிருக்கலாம்.
January 30, 2025 7:12 PM IST

