புது தில்லியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன சிறுவனை அம்மாநில காவல் துறையினர் தற்போது மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தில்லியிலுள்ள தனியார் தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான குழந்தைகள் காப்பகத்திலிருந்து இரண்டு சிறுவர்கள் காணாமல் போனார்கள். அதன் பின்னர், காவல் துறையினர் புது தில்லியின் அனைத்து ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்கள், உணவகங்கள் என பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
இருப்பினும், அவர்கள் இருவரையும் கண்டுபிடிக்க முடியாததினால் அவர்கள் குறித்த தகவல்கள் தருபவர்களுக்கு ரூ.20,000 சன்மானமாக வழங்கப்படும் என அறிவித்து காவல் துறையினர் அவர்களை தேடி வந்தனர்
இதையும் படிக்க: ராகுல் மீதான அவதூறு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

