• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கோயம்பேடு சந்தையில் தேங்காய் விலை கடும் உயர்வு: போக்குவரத்து செலவு அதிகரிப்பே காரணம் | price of coconut has hike in Koyambedu market

GenevaTimes by GenevaTimes
January 29, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
கோயம்பேடு சந்தையில் தேங்காய் விலை கடும் உயர்வு: போக்குவரத்து செலவு அதிகரிப்பே காரணம் | price of coconut has hike in Koyambedu market
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: கோயம்பேடு சந்தையில் தேங்காய் விலை உயர்ந்துள்ளது. சில்லறை விலையும் அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த மாதம் ஒரு கிலோ தேங்காய் ரூ.40 முதல் ரூ.55 வரை விற்பனையானது. நேற்று ரூ.65 வரை விற்றது. சில்லறை விலையில் ஒரு கிலோ தேங்காய் அதிகபட்சமாக ரூ.90 வரை விற்பனையானது.

இதுகுறித்து தேங்காய் வியாபாரிகள் கூறும்போது, ‘‘கனமழை மற்றும் நோய் காரணமாக உற்பத்தி பாதித்து தேங்காய் வரத்து சுமார் 300 டன் வரை குறைந்துள்ளது. இதுதான் தேங்காய் விலை உயர்வுக்கு காரணம்’’ என்று தெரிவித்தனர்.

தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்தியாவில் தேங்காய் உற்பத்தியில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் கர்நாடகாவும், 3-வது இடத்தில் கேரளாவும் இருக்கின்றன. தமிழகத்தில் கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தஞ்சாவூர், தேனி, சேலம் மாவட்டங்களில் தென்னை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

மாநிலத்தில் தென்னை சாகுபடியும், தேங்காய் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. தென்னை சாகுபடி பரப்பளவு 4 லட்சத்து 70 ஆயிரம் எக்டேரில் இருந்து 4 லட்சத்து 82 ஆயிரம் எக்டேராக அதிகரித்துள்ளது.

ஒரு எக்டேருக்கு சராசரியாக 13 ஆயிரம் தேங்காய் கிடைக்கிறது. தேங்காய் மொத்த சந்தையில் நேற்று ஒரு கிலோ ரூ.45 முதல் 50 வரைதான் விற்பனையானது. சென்னையில் தேங்காய் விலை உயர்வுக்கு போக்குவரத்து செலவு அதிகமானதே காரணமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



Read More

Previous Post

’வரலாற்றிலேயே வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த முதலமைச்சர் யார் தெரியுமா?’ உடைத்து பேசிய அன்புமணி!

Next Post

மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும்..? ஆன்லைனில் தகவல் தேடியபின் தற்கொலை செய்த சிறுமி | Makkal Osai

Next Post
மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும்..? ஆன்லைனில் தகவல் தேடியபின் தற்கொலை செய்த சிறுமி | Makkal Osai

மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும்..? ஆன்லைனில் தகவல் தேடியபின் தற்கொலை செய்த சிறுமி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin