
Last Updated:
குடியரசுத் தின விழாவில் கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மாநகர் காவல் ஆணையர் தாம்ஸன் ஜோஸ் மயங்கி விழுந்தார்.
இந்திய குடியரசுத் தினம் நாடு முழுக்க விமரிசையாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்தார். மாநிலங்களின் ஆளுநர்கள் தேசியக் கொடியை காலை ஏற்றி மரியாதை செய்தனர்.
தமிழ்நாட்டில் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்தார். அதேபோல், கேரளா மாநிலத்தின் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்தார். ஆளுநர் கொடியேற்றும் நிகழ்ச்சி முடிந்து கேரளா ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் குடியரசுத் தின உரையை நிகழ்த்தினார்.
அந்த சமயத்தில் ஆளுநர் அருகே கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மாநகர் காவல் ஆணையர் தாம்ஸன் ஜோஸ் நின்றிருந்தார். அப்போது திடீரென மயங்கிய ஆணையர் தாம்ஸன் ஜோஸ் நிலைதடுமாறி கீழே சரிந்தார். இதனைக் கண்டதும், அங்கிருந்த அதிகாரிகள் உடனடியாக அவரை மீட்டு நிகழ்விடத்திலேயே முதலுதவி அளித்தனர்.
#JUSTIN குடியரசு தின விழாவில் ஆளுநர் பேசிக்கொண்டிருந்தபோது, திருவனந்தபுரம்
காவல் ஆணையர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு#Kerala #RepublicDay2025 #RepublicDay #News18Tamilnadu https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/XdRSGCznGK
— News18 Tamil Nadu (@News18TamilNadu) January 26, 2025
தொடர்ந்து காவல் ஆணையர் தாம்ஸன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது காவல் ஆணையர் தாம்ஸன் ஜோஸ் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
January 26, 2025 4:31 PM IST

