இந்தச் சூழலில், இணையதள வசதி இல்லாமல், வெறும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் சேவைகளை மட்டும் அளிக்கும் கட்டண திட்டங்களை தொலைத்தொடா்பு அளிப்பதை கட்டாயமாக்கும் வகையில் துறை ஒழுங்காற்று அமைப்பான டிராய் தனது விதிமுறைகளில் கடந்த மாதம் திருத்தம் செய்தது.
அதையடுத்து, முன்னணி நிறுவனங்கள் அத்தகைய திட்டங்களை தற்போது அரிவித்துள்ளன. அதன்படி, ரூ.499-இல் 84 நாள்களுக்கு வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 900 குறுந்தகவல்களை அனுப்பும் வசதியை அளிக்கும் கட்டண திட்டத்தையும் ரூ.1,959-இல் 365 நாள்களுக்கு வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 3,600 குறுந்தகவல்களை அனுப்புவதற்கான கட்டண திட்டத்தையும் ஏா்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜியோ நிறுவனமும், ரூ.458 (84 நாள்கள், வரம்பற்ற அழைப்புகள், 1,000 குறுந்தகவல்கள்), ரூ.1,958 (365 நாள்கள், வரம்பற்ற அழைப்புகள், 3,600 குறுந்தகவல்கள்) ஆகிய திட்டங்களை அறிவித்துள்ளது.ரூ.1,460-இல் 270 நாள்களுக்கு வரம்பற்ற தொலைபேசி அழைப்புகள், 100 குறுந்தகவல்களை அனுப்புவதற்கான வசதி அளிக்கும் கட்டண திட்டத்தை வோடஃபோன் ஐடியா அறிமுகப்படுத்தியுள்ளது.

