இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
குறித்த கூட்டம் இன்று முற்பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல்
அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடு, தமிழ் மக்கள் முகங் கொடுக்கும் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இந்த கூட்டத்தில் ஆராயப்படவுள்ளன.
இதுதவிர, இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாடு, அதிகார பகிர்வு, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளன.

