கூச்சிங்:
சரவாக்கில் வெள்ளத்தால் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி நிலவரப்படி 100 ஆக உயர்ந்துள்ளது, இது நேற்று இரவு 90 ஆக இருந்தது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சரடோக் மற்றும் டாடாவில் உள்ள இரண்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று, மாநில பேரிடர் மேலாண்மைக் குழு (JPBN) செயலகம் தெரிவித்துள்ளது.
சரடோக்கில் உள்ள டேவான் ரூமா தயாக்கில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 90 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது, அதே நேரத்தில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் டாடாவில் உள்ள ரூமா ஸ்டீவனில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அது கூறியுள்ளது.
மேலும் “மாநிலத்தில் வெள்ளம் ஏற்படலாம் என நம்பப்படும் சுமார் 26 இடங்கள் மலேசிய குடிமைத் தற்காப்புப் படையால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன” என்று அது மேலும் தெரிவித்துள்ளது.
The post சரவாக்கில் வெள்ளம்; பாதிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை அதிகரிப்பு appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

