Nainar Nagendran: திருநெல்வேலியில் பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக பேசினாலே கூட்டணி அமைந்துவிடும் என்று தெரிவித்தார். மேலும், வருமான வரித்துறை ரெய்டுக்கும் கூட்டணிக்கும் சம்மந்தம் இல்லை எனவும், திமுக தொடர்பான இடங்களிலும் ரெய்டு நடந்து வருகிறது. எனவே ரெய்டு மூலம் மிரட்டி கூட்டணிக்கு பணிய வைக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை எனவும் அவர் பேட்டி அளித்துள்ளார்.

