அமெரிக்காவில் குடியுரிமைக் கட்சி வெற்றி பெற்று அதிகார மாற்றம் நடைபெற்றதைத் தொடர்ந்து, இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பயனர்கள் வித்தியாசமான ஒன்றை எதிர்கொண்டுள்ளனர்.
பலரும் தங்கள் கணக்கு தானாகவே அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி.வான்ஸை பின்தொடர்வதை கவனித்து, இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
பலரும் இது ஏதாவது கோளாறாக இருக்கும் என நினைத்தனர். ஆனால், இது திட்டமிட்டு செய்யப்பட்டதுதான் என விளக்கியுள்ளார் மெட்டா நிறுவன செய்தித் தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன்.

