கோலாலம்பூர்:
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சமூகப் பாதுகாப்பு அமைப்பான Socso-வை ஏமாற்றி RM832,000 பணம் பெற்றுக்கொண்டதாக, இன்று கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் ஒரு தொழில் அதிபர் ஒருவருக்கு எதிராக17 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.
இருப்பினும் குற்றம் சாட்டப்பட்டவர் தான் குற்றமற்றவர் என்று கூறி, விசாரணை கோரினார்.
முதல் குற்றச்சாட்டு தொடக்கம் 17 வது குற்றச்சாட்டுகளின்படி, டிசம்பர் 7, 2020 மற்றும் ஜூன் 12, 2021 க்கு இடையில் ஒன்பது நிறுவனங்களின் பெயர்களில் நடத்தப்படாத மூன்று பாடநெறிகளுக்கான வருகையாளர்கள் பெயர்கள் மற்றும் பங்கேற்பாளர்களின் கையொப்பங்களின் பட்டியல் அடங்கிய ஆவணத்தை உண்மை என நம்ப வைத்து, Socso அமைப்பின் இரண்டு அதிகாரிகள ஏமாற்றியதாக 52 வயதான P. சத்திய சீலன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டவரின் நிறுவனமான Global Education Network Sdn Bhd-க்கு Socso அமைப்பு izappiidaaka RM832,000 செலுத்த வேண்டியிருந்தது, அவரது ஆவணங்கள் அடிப்படையிலேயே Socso அமைப்பு ஏமாற்றப்பட்டு, குறித்த நிறுவனத்திற்கு அந்த இழப்பீட்டை வழங்கியது எனக்கூறப்பட்டது.
இந்தச் செயல் டிசம்பர் 23, 2020 முதல் ஜனவரி 23, 2021 வரை புத்ராஜெயாவிலுள்ள சொக்சோ அலுவலகத்தின் வேலைவாய்ப்பு சேவைகள் பிரிவு, வேலைவாய்ப்பு காப்பீட்டு அமைப்பு பிரிவில் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் ஒரு வருடம் சிறைத்தண்டனையும் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் கசையடி மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.


