
Last Updated:
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் இரண்டு பிரிவுகளாக பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறுகிறது.
Also Read | குடியரசு தின விழாவிற்கு முதல் முறையாக இந்தியா வரும் அதிபர்.. வெளியுறவு அமைச்சகம் தகவல்..!
ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரை முதல் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரும்,
மார்ச் 10ஆம் தேதி 2வது கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 27 அமர்வுகளாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது.
January 18, 2025 6:53 AM IST

