• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

GISBH இல்லங்களிலிருந்து 448 குழந்தைகள் தங்கள் குடும்பங்களுக்குத் திரும்பினர் – அமைச்சர் – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
January 17, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
GISBH இல்லங்களிலிருந்து 448 குழந்தைகள் தங்கள் குடும்பங்களுக்குத் திரும்பினர் – அமைச்சர் – Malaysiakini
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Global Ikhwan Services & Business Holdings (GISBH) Sdn Bhd உடன் இணைக்கப்பட்ட இல்லங்களிலிருந்து  மீட்கப்பட்ட 560 குழந்தைகளில் 448 பேர் அவர்களது குடும்பங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகப் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிரந்தர மற்றும் இடைக்கால நீதிமன்ற உத்தரவுகளின் கீழ், மேலும் ஐந்து குழந்தைகள் தகுந்த பாதுகாவலர்களுடன் வைக்கப்பட்டதாகவும், 107 குழந்தைகள் எட்டு சமூக நலத்துறை நிறுவனங்களில் வைக்கப்பட்டதாகவும் அமைச்சர் நான்சி சுக்ரி கூறினார்.

“சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மீட்டெடுக்க விரும்புகிறார்கள், ஆனால் அரசாங்கத்தின் நடவடிக்கைகளைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதால் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்துபவர்கள் சிலர் இருக்கலாம். இது நியாயமற்றது என்று நான் நம்புகிறேன்”.

“முன்பு, நாங்கள் போலீஸ் அறிக்கைகள் மற்றும் சட்ட நடைமுறைகளுக்காகக் காத்திருந்ததால்  குழந்தைகளை ஒப்படைக்கவில்லை. இருப்பினும், இப்போது அந்தச் செயல்முறைகள் முடிந்துவிட்டதால், குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் மீண்டும் இணைக்கப்பட வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

இன்று கிளந்தான், கம்போங் பாசிர் பெக்கான் தெங்காவில் மடானி கிராம தத்தெடுப்புத் திட்டத்தைக் கையளிக்கும் நிகழ்வோடு இணைந்து மடானி ஒருங்கிணைந்த காசிஹ் திட்டத்தை ஆரம்பித்து வைத்தபின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நான்சி தங்கள் குழந்தைகளை மீட்டெடுக்க விரும்பும் பெற்றோருக்கு அவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்று உறுதியளித்தார் மேலும் காவலை மீண்டும் பெறுவது பற்றி விவாதிக்க அமைச்சகத்தை அணுகுமாறு அவர்களை ஊக்குவித்தார்.

குழந்தைகளின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதே முதன்மையான குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்னும் அவ்வாறு செய்யாத பெற்றோருக்கு எதிராக அமைச்சகம் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தினார்.

“நாங்கள் எங்கள் கடமைகளைச் சட்டத்தின் கீழ் செய்கிறோம். மனம் மாறிய பெற்றோர்கள் முன் வந்து தங்கள் குழந்தைகளைப் பற்றிய முழுமையான தகவல்களை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்”.

“சிறந்த முடிவுகள் குழந்தைகளின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நாங்கள் கவனிப்பை வழங்கினாலும், பெற்றோரின் அன்பிற்கு ஈடாக முடியாது,” என்று அவர் கூறினார்.

குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 25(2)(a) இன் கீழ் நீதிமன்றத்திலிருந்து நலன்புரித் துறை இரண்டு மாத தற்காலிக காவலில் ஆணை பெற்ற பின்னர், 560 குழந்தைகள் – 283 சிறுவர்கள் மற்றும் 277 பெண்கள் – தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

கிராமத்திற்கு புதிய வசதிகள்

இன்றைய திட்டம்குறித்து, நான்சி தனது அமைச்சகம் மதானி கிராம தத்தெடுப்பு திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஐந்து அம்சங்களில் கவனம் செலுத்துகிறது, கிராமவாசிகளின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக உடல் பயிற்சிகள் மற்றும் உளவியல் சமூக நடவடிக்கைகளை வழங்க ரிம 2.5 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

“திட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் தளவாட மேம்பாடு ஆகும், இதில் அணுசக்தி ஏஜென்சியுடன் இணைந்து பயோகாம்போசிட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிதக்கும் ஜெட்டியை நிர்மாணிப்பது அடங்கும்”.

“இந்த ஜெட்டி தீயணைப்புத் துறையின் மீட்புப் பாதையாகச் செயல்படும், குறிப்பாக வெள்ளம் அல்லது நீரில் மூழ்கும்போது”.

“இந்தத் திட்டத்தில் 10,000 மீன் குஞ்சுகளின் பங்களிப்பு உட்பட மீன்வளத் துறையின் ஆதரவுடன் மீன் வளர்ப்பும் அடங்கும்”.

“கூடுதலாக, இருண்ட மற்றும் பாதுகாப்பற்ற பகுதிகளில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக 20 சூரிய சக்தியில் இயங்கும் விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காகக் கூட்டாட்சி மற்றும் மாநில அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அமைச்சகத்தின் பொதுச் செயலாளர் மசியா சே யூசாஃப் கூறினார்.

“மடானி கிராமத்தைத் தத்தெடுக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற இலக்குக் குழுக்களின் தேவைகளில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்”.

Like this:

Like Loading…



Read More

Previous Post

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் ஜோகோவிச், சபலென்கா | Australian Open 2025 Day 6 Highlights

Next Post

அமெரிக்காவில் டிக் டொக் செயலிக்கு தடை : நீதிமன்றம் வழங்கிய அனுமதி

Next Post
அமெரிக்காவில் டிக் டொக் செயலிக்கு தடை : நீதிமன்றம் வழங்கிய அனுமதி

அமெரிக்காவில் டிக் டொக் செயலிக்கு தடை : நீதிமன்றம் வழங்கிய அனுமதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin