நிஸாமாபாத்தில் தேசிய மஞ்சள் வாரியத்தை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று(ஜன. 14) தொடங்கி வைத்தார். மஞ்சள் வாரிய தலைவராக பல்லே கங்கா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய மஞ்சள் வாரிய தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், “உலகளாவிய மஞ்சள் உற்பத்தியில் 70 சதவிகிதம் இந்தியாவில் மேற்கொள்ளப்படுகிறது என்றும் இந்தியாவில் 30 வகையான மஞ்சள் உற்பத்தி செய்யப்படுகிறது” என்றும் தெரிவித்தார்.

