லார்சன் & டூப்ரோ நிறுவனத்தில் சனிக்கிழமை வேலை நாளாக கடைபிடிப்பது குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் எஸ்.என். சுப்ரமணியத்திடம் நிகழ்ச்சி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், ஊழியர்களிடம் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை வாங்க முடியாததற்கு வருத்தம் அடைகிறேன், ஞாயிறுகளிலும் அவர்களை வேலை வாங்க முடியும் என்றால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன், ஏனெனில் நான் ஞாயிற்றுக்கிழமை வேலை செய்கிறேன் எனத் தெரிவித்தார்.
மேலும், அவர் பேசியதாவது:
“வீட்டில் அமர்ந்து என்ன செய்யப் போகிறீர்கள்? மனைவியின் முகத்தை எவ்வளவு நேரம் உற்றுப் பார்க்க முடியும்? அலுவலகத்துக்கு வந்து வேலை செய்யுங்கள் எனக் குறிப்பிட்டார்.
சமீபத்தில் எனது சீன நண்பர் கூறினார், அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி சீனா முன்னேறும் என்றார். ஏனெனில் சீனாவில் வாரத்துக்கு 90 மணிநேரம் வேலை செய்வதாகவும் அமெரிக்கர்கள் வெறும் 50 மணிநேரம் மட்டுமே வேலை செய்வதாகவும் தெரிவித்தார்.
நாமும் உலகின் முன்னணி நாடாக வளர வேண்டுமானால், வாரத்துக்கு 90 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்” எனப் பேசினார்.

