பரிசுத்தொகை வழங்காதது ஏன்?
2025 ஆம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் எவ்வளவு ரூபாய் பணம் தரப்போவதாக ஆட்சியாளர்கள் அறிவிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு சாமானிய மக்களிடையே இருந்தது. ஆனால், எப்போதும் வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பணம் எதுவும் இல்லை என்ற அறிவிப்பு சற்றே ஏமாற்றம் அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பரிசுத்தொகை வழங்காததை எதிர்க்கட்சிகள் விமர்சித்தபோதிலும், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கியது உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட நிதி நெருக்கடியால், பரிசுத் தொகுப்புடன் பணம் தர முடியவில்லை என ஆளும் திமுக அரசு விளக்கமளித்தது. இந்த நிலையில், பொங்கல் பரிசுத்தொகை வழங்குவது குறித்து தேர்தல் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என அமைச்சர் துரைமுருகன் பேசியிருப்பது தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

