கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் யானை தாக்கியதில் கர்நாடகாவைச் சேர்ந்த 22 வயது பழங்குடியின இளைஞர் பலியானார்.
கர்நாடக மாநிலம் குட்டா பகுதியைச் சேர்ந்த பழங்குடியின இளைஞரான விஷ்னு (வயது 22), கடந்த ஜன.7 அன்று இரவு 7.30 மணியளவில் கொல்லிவயல் பகுதியிலுள்ள பத்திரி வனப்பகுதியின் வழியாக கர்நாடக நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, தீடீரென அங்கு வந்த காட்டு யானை விஷ்னுவை தாக்கியுள்ளது. இதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் உடனடியாக அங்கு சென்று அவரை மீட்டு அவர்களது ஜீப்பில் அருகிலுள்ள மனந்தவாடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே விஷ்னு பரிதாபமாக பலியானார்.
இதையும் படிக்க: சரணடைந்த 6 நக்சல்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: கர்நாடக அரசு

