
Last Updated:
ரயில் டிக்கெட்டுகளை தவிர்த்து பிளாட்பார்ம் டிக்கெட், விளம்பரங்கள், ரயில் நிலையங்களில் வைக்கப்படும் கடைகள், காத்திருப்பு அறைகள், பயணிகளின் உடைமைகளை பாதுகாக்கும் அறைகள் உள்ளிட்டவற்றின் மூலமாகவும் ரயில் நிலையங்களுக்கு வருமானம் கிடைக்கிறது.
இந்தியாவில் ஏராளமான ரயில் நிலையங்கள் இருந்தாலும் அவை எல்லாவற்றிலும் அதிக வருமானம் கிடைப்பது கிடையாது. சில ரயில் நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும். சில ரயில் நிலையங்கள் அதற்கு முற்றிலும் மாற்றாக பயணிகள் கூட்டம் இல்லாத சூழலும் நிலவும்.
இருப்பினும் பொதுமக்களுக்கு சேவை அளிக்கும் நோக்கத்தில் இந்திய ரயில்வே செயல்பட்டு வருகிறது. ரயில்வே டிக்கெட்டுகளுக்காக ஆண்டுதோறும் மானிய தொகை பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வழங்கப்படுகிறது. இதனால் ரயில் பயணிகள் குறைந்த கட்டணத்தில் நிறைவான பயணத்தை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 13000 இயக்கப்படுகின்றன.
நாள்தோறும் சுமார் 2 கோடிக்கும் அதிகமானோர் இந்த ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகிறார்கள். 7,300 க்கும் அதிகமான ரயில் நிலையங்கள் இந்தியாவில் உள்ளன. ரயில் டிக்கெட்டுகளை தவிர்த்து பிளாட்பார்ம் டிக்கெட், விளம்பரங்கள், ரயில் நிலையங்களில் வைக்கப்படும் கடைகள், காத்திருப்பு அறைகள், பயணிகளின் உடைமைகளை பாதுகாக்கும் அறைகள் உள்ளிட்டவற்றின் மூலமாகவும் ரயில் நிலையங்களுக்கு வருமானம் கிடைக்கிறது.
அந்த வகையில் இந்தியாவிலேயே அதிக வருமானம் கொண்ட ரயில் நிலையமாக புதுடெல்லி ரயில் நிலையம் உள்ளது. இங்கு ஆண்டு ஒன்றுக்கு 3,300 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் கிடைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 – 24 நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
மேலும் புது டெல்லி ரயில் நிலையம் அதிகமான பயணிகளை கையாளக்கூடிய ரயில் நிலையங்களில் ஒன்றாக உள்ளது. சுமார் 4 கோடி பயணிகள் இந்த ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
இதற்கு அடுத்ததாக மேற்கு வங்கத்தின் ஹவுரா ரயில்வே நிலையம் உள்ளது. இங்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் 1700 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவும் நாட்டில் மிகவும் பிசியான ரயில் நிலையங்களில் ஒன்று ஆகும்.
January 07, 2025 4:38 PM IST

