புது தில்லி: ஆப்கானிஸ்தான் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா திங்கள்கிழமை கண்டனம்தெரிவித்தது.
ஆப்கானிஸ்தானின் பாக்திகா மாகாணத்தில் தெஹ்ரிக்- ஏ- தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் பதுங்குமிடங்கள் மீது பாகிஸ்தான் கடந்த மாதம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 27 பெண்கள், குழந்தைகள் உள்பட 47 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு பதிலடி அளிக்கும் நோக்கில் ஆயிரக்கணக்கான தலிபான்கள், பாகிஸ்தான் எல்லையில் குவிந்து அந்நாட்டு ராணுவத்தினரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

