
Last Updated:
HMPV in India | சீனாவில் HMPV வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பெங்களூருவில் உள்ள 8 மாதக் குழந்தைக்கு HMPV பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூருவில் 8 மாத குழந்தைக்கு HMPV பாசிட்டிவ் வந்துள்ளதாக கர்நாடக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சீனாவில் HMPV வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பெங்களூருவில் உள்ள 8 மாதக் குழந்தைக்கு HMPV பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அந்த குழந்தைக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், குழந்தைக்கு எந்த பயண வரலாறும் இல்லை என்றும், இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கர்நாடக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அத்துடன், சீனாவில் பரவி வரும் HMPVயின் அதே திரிபு இதுதானா என்பதும் தற்போது வரை தெளிவாக தெரியவில்லை.
Also Read: Scrub Typhus: அச்சுறுத்தும் ‘ஸ்க்ரப் டைபஸ்’.. இந்த அறிகுறிகள் தென்பட்டால் கவனமாக இருங்கள்..!
இந்நிலையில், ஜனவரி 3 ஆம் தேதி, இந்தியாவில் உள்ள தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC) நாட்டில் சுவாச மற்றும் பருவகால காய்ச்சல் வழக்குகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், HMPV வைரஸ் பற்றிய சமீபத்திய அறிக்கைகளை அடுத்து சர்வதேச நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியது.
ஹெல்த் சர்வீசஸ் டைரக்டர் ஜெனரல் (டிஜிஹெச்எஸ்) டாக்டர் அதுல் கோயல் கூறுகையில், HMPV வைரஸ் ஜலதோஷத்தை ஏற்படுத்துகிறது என்றும், இது சிறியவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருவருக்கு இருமல் மற்றும் சளி இருந்தால், தொற்று பரவாமல் இருக்க மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
January 06, 2025 11:19 AM IST

