இதுமட்டுமின்றி எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கம் மற்றும் திடக்கழிவு, திரவக்கழிவு ஆகியவற்றை கையாளவும், மேலாணை செய்திடவும் தற்போது மாநகர, நகர, பேரூராட்சி, ஊராட்சி அமைப்புகள் தனித்தனியாக பொறுப்பேற்றுள்ள நிலைமாறி ஒட்டுமொத்தமாக “திடக்கழிவு மற்றும் திரவக்கழிவு மேலாணை துறை” என்ற புதிய துறை அமைக்க வேண்டிய அவசியம் குறித்தும் விவாதிக்க வேண்டும் என அவர் கடிதம் கொடுத்து உள்ளார். இந்த விவகாரங்களை அவையின் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது குறித்த முடிவெடுக்கும் அதிகாரம் சபாநாயகரிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

