• Login
Tuesday, February 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா தொடர்ந்து விளையாட வேண்டும்’ – இர்பான் பதான் வலியுறுத்தல்

GenevaTimes by GenevaTimes
January 2, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
‘டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா தொடர்ந்து விளையாட வேண்டும்’ – இர்பான் பதான் வலியுறுத்தல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 02, 2025 9:31 PM IST

நாளை நடைபெறும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தான் விளையாட போவதில்லை என்றும், தனக்கு ஓய்வு அளிக்குமாறும் ரோகித் சர்மா பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ரோஹித் சர்மா

டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா தொடர்ந்து விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரரும் விமர்சகருமான இர்பான் பதான் வலியுறுத்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வை அறிவிப்பார் என்று பரவலாக பேசப்படும் நிலையில் இர்பான் பதான் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரை இந்திய அணி கைப்பற்றினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். ஆனால் 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் ஒரு போட்டியில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

2 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னி நகரில் நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் பும்ரா தலைமையேற்ற முதல் டெஸ்டில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றது. ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி 2 தோல்விகளையும், ஒரு மேட்சில் டிராவையும் சந்தித்தது.

இதனால் ரோஹித் சர்மா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. பேட்ஸ்மேனாகவும் கடந்த 15 இன்னிங்ஸ்களில் 164 ரன்கள் மட்டுமே ரோகித் சர்மா எடுத்து இருக்கிறார்.

நாளை நடைபெறும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தான் விளையாட போவதில்லை என்றும், தனக்கு ஓய்வு அளிக்குமாறும் ரோகித் சர்மா பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க – குகேஷ், மனு பாக்கருக்கு கேல் ரத்னா… தமிழக பாரா பேட்மின்டன் வீராங்கனைகள் 3 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு

இதற்கிடையே பார்டர் – கவாஸ்கர் தொடருடன் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிப்பார் என்று பரவலாக பேசப்படுகிறது. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் இர்பான் பதான், ‘எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால், ரோஹித் சர்மா தொடர்ந்து விளையாட வேண்டும். இந்த சூழலில் அவர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடைபெற நான் விரும்பவில்லை.

In my personal opinion, Rohit sharma should fight out this phase. I don’t want him to walk out of this. He has done enough for Indian cricket, and i am sure he has the ability to turn this around.This is the last and a crucial test match of the series, and expirence should come…


— Irfan Pathan (@IrfanPathan) January 2, 2025

இந்திய கிரிக்கெட்டிற்காக அவர் ஏராளமான பங்களிப்பு செய்துள்ளார். 5 ஆவது டெஸ்ட் மிக முக்கியமான போட்டியாகும். இதில் வெற்றி பெற அனுபவம் அவசியம். முடிவு என்னவாக இருந்தாலும் அதனை இந்த தொடருக்கு பின்னர்தான் வெளிப்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

First Published :

January 02, 2025 9:31 PM IST



Read More

Previous Post

‘வன்மத்தை திணிப்பதே முக்கியப் பணி.. முதன்மையானவர்.. மூத்தவர்’ கே.என்.நேருவை மறைமுக சாடிய திமுக எம்.எல்.ஏ!

Next Post

2025- இல் தங்கத்தின் விலை குறையுமா? அதிகரிக்குமா? நிபுணர்களின் பதில் இதுதான்!!

Next Post
2025- இல் தங்கத்தின் விலை குறையுமா? அதிகரிக்குமா? நிபுணர்களின் பதில் இதுதான்!!

2025- இல் தங்கத்தின் விலை குறையுமா? அதிகரிக்குமா? நிபுணர்களின் பதில் இதுதான்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin