• Login
Saturday, April 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிகார் அரசைக் கண்டித்து உண்ணாவிரதம்: பிரசாந்த் கிஷோர்!

GenevaTimes by GenevaTimes
January 2, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
பிகார் அரசைக் கண்டித்து உண்ணாவிரதம்: பிரசாந்த் கிஷோர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அரசுப் பணியாளர் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளார்.

தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மாநில அரசு தவறிவிட்டதால், பிரசாந்த் கிஷோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

பிகாரில் நடைபெற்ற அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் முதல் நிலைத் தேர்வு டிச. 13ஆம் தேதி நடைபெற்றது. இதில் வினாத்தாள்களை குறிப்பிட்ட மையங்களிம் மட்டும் தாமதமாகக் கொடுத்தது உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தேர்வர்கள் வலியுறுத்தி வந்தனர்.

மாநில அரசைக் கண்டித்து தேர்வாணையத்தை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். தொடர் போராட்டங்களுக்கு மத்தியில், டிச. 30ஆம் தேதி ஆணையத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தேர்வர்களை காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. பிகார் அரசின் இத்தகைய நடவடிக்கையைக் கண்டித்து பாட்டாவில் உள்ள காந்தி திடலில் தேர்வர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துவந்த ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர், தற்போது தேர்வர்களுக்கு ஆதரவாக உரிய நீதி கிடைக்க வேண்டி உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளார்.

முதல் நிலைத் தேர்வை அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும், மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தவறிவிட்டதாகவும் கூறி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

v

இதற்கு முன்பு மாநில தலைமைச் செயலாளர் உடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மாணவர்கள் தரப்பு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டதாக மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளையும் திரும்பப் பெற கோரிக்கைவைக்கப்பட்டது. எனினும் இவற்றுக்கு தீர்வு காணபது குறித்த எந்தவொரு நம்பிக்கையையும் தலைமைச் செயலாளர் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க | மனைவியின் தனிப்பட்ட உரிமைகளில் கணவன் தலையிடக் கூடாது: நீதிமன்றம்

Read More

Previous Post

தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவர் நியமனம்

Next Post

Karate Championship: கராத்தேவில் தங்க மெடல்களை குவித்த தங்கங்கள்… ரயில் நிலையத்தில் காத்திருந்த சர்ப்ரைஸ்…

Next Post
Karate Championship: கராத்தேவில் தங்க மெடல்களை குவித்த தங்கங்கள்… ரயில் நிலையத்தில் காத்திருந்த சர்ப்ரைஸ்…

Karate Championship: கராத்தேவில் தங்க மெடல்களை குவித்த தங்கங்கள்... ரயில் நிலையத்தில் காத்திருந்த சர்ப்ரைஸ்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin