தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த வழக்கை சிபிசிஐடி விசராணை செய்த நிலையில், அல்லிக்குளம் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. 70 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், கடந்த டிசம்பர் 27ஆம் தேதி அன்று சதீஷ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மாணவி கொலை வழக்கில் சதீஷுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் மாணவியை சித்ரவதை செய்ததாக பதியப்பட்ட வழக்கில் 3ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது. குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கபப்ட்டு உள்ளதால் தூக்கு தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளார்.

