
Last Updated:
PSLV C60 rocket | சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட் விண்ணில் பாய இருக்கிறது. இதற்கான 48 மணி நேர கவுன்ட்டவுன் நேற்றிரவு தொடங்கியது.
பிஎஸ்எல்வி சி60 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியுள்ளது.
2035ஆம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம் அமைக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னதாக தயாரிப்புத் திட்டமாக ஸ்பேட் எக்ஸ் என்ற திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்த உள்ளது.
ஸ்பேட் எக்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்பேஸ் டாக்கிங் எனப்படும் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் குறித்த ஆய்வுகளையும் இஸ்ரோ செய்துவந்தது.
தனித்தனியாக செல்லும் இரண்டு விண்கலன்கள் அந்தரத்தில் கட்டளைகளின் அடிப்படையில் இணைவதே ஸ்பேஸ் டாக்கிங். இந்நிலையில் ஸ்பேட் எக்ஸ் திட்டத்துக்கான ராக்கெட் ஏவுதல் நாளை (30.12.24) இரவு 9.58 மணிக்கு நடைபெற உள்ளது.
தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய விண்கலன்கள் பிஎஸ்எல்வி சி60 ரக ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளன. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட் விண்ணில் பாய இருக்கிறது. இதற்கான 48 மணி நேர கவுன்ட்டவுன் நேற்றிரவு தொடங்கியது.
இந்த இரண்டு விண்கலன்களும் பூமியில் இருந்து 355 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள புவி தாழ்வட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பின்னர், பூமியை சுற்றிவரும்போது டாக்கிங் என்கிற வகையில் இணைக்கும் சோதனையானது நடத்தப்பட இருக்கிறது.
இதையும் படிக்க: ரயிலுக்கு அடியில் 290 கி.மீ. பயணம் செய்த நபர்.. விசாரித்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்தால் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு இந்தியர்களை அனுப்பவது முதல் இஸ்ரோவின் கனவு திட்டமான 2035ஆம் ஆண்டு இந்தியாவுக்கு என விண்வெளியில் தனி ஆராய்ச்சி மையத்தை அமைக்கும் திட்டம் வரை பலவற்றிக்கு இந்த சோதனை முதல்படியாக அமையும் என்பதும் ரஷ்யா, அமெரிக்கா, சீனா வரிசையில் டாக்கிங் சிஸ்டத்தை வைத்து இருக்கும் நான்காவது நாடு இந்தியா என்கிற சாதனையையும் படைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
December 29, 2024 7:28 AM IST

