சிறுமியின் கர்ப்பத்தைப் பற்றி அறிந்த குற்றவாளிகள் மூவரும் கடந்த டிச.22 அன்று அவரைக் கொலைச் செய்ய முயற்சித்துள்ளனர். அதிலிருந்து தப்பித்து அவர் திப்பியாப்பூர் பகுதியிலுள்ள அவரது உறவுக்காரப் பெண்ணின் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அந்த சிறுமியின் உறவுக்கார பெண்ணின் உதவியோடு அவர் அம்மாநில காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
முன்னதாக, அந்த மூவரும் சிறுமியின் தாயாரையும் இதேப்போல் வன்கொடுமை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் அந்த மூவரின் மீதும் போக்ஸோ சட்டம் பதிவு செய்த போலீஸார் அவர்களை கைது செய்து நேற்று (டிச.27) சிறையில் அடைத்தனர்.

