
Last Updated:
அல்லு அர்ஜுன் தரப்பில் ஒரு கோடி ரூபாய், இயக்குநர் சுகுமார் தரப்பில் 50 லட்ச ரூபாய், தயாரிப்பாளர்கள் தரப்பில் 50 லட்ச ரூபாய் என இரண்டு கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
புஷ்பா 2 ரிலீஸின்போது ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள சிறுவனுக்கு படக்குழு தரப்பில் 2 கோடி ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில், தான் நடித்த புஷ்பா 2 படத்தின் சிறப்புக் காட்சிக்கு அல்லு அர்ஜுன் வந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த அவரது மகன் சிகிச்சையில் உள்ளார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் அல்லு அர்ஜுன் கைது ஆகி பிணையில் வெளியே வந்தார். இந்நிலையில் சிகிச்சையில் உள்ள சிறுவனை, அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் சென்று சந்தித்தார். சிறுவன் உடல் நலம் தேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு படக்குழு தரப்பில் 2 கோடி ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அல்லு அர்ஜுன் தரப்பில் ஒரு கோடி ரூபாய், இயக்குநர் சுகுமார் தரப்பில் 50 லட்ச ரூபாய், தயாரிப்பாளர்கள் தரப்பில் 50 லட்ச ரூபாய் என இரண்டு கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு பிறகு நினைவு திரும்பியதாக சிறுவனின் தந்தை பாஸ்கர் தெரிவித்துள்ளார். தற்போது ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் கருவிகள் இல்லாமல், சிறுவன் இயல்பாகவே சுவாசித்து வருவதாக பாஸ்கர் தெரிவித்தார்.
சிறுவன் கண்களை திறந்து, மூட்டுகளை அசைக்கிறான் என்றாலும், முழுமையாக யாரையும் அடையாளம் காணும் அளவுக்கு இன்னும் அவனின் உடல்நிலை சரியாகவில்லை என அவனுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிறுவன் மற்றவர்களை அடையாளம் காணும் அளவுக்கு உடல்நிலை தேற இன்னும் சில நாட்கள் ஆகும் என்றும் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Hyderabad,Hyderabad,Telangana
December 26, 2024 9:58 AM IST
Allu Arjun: அல்லு அர்ஜுன் விவகாரத்தில் 20 நாட்கள் கழித்து வெளிவந்த குட் நியூஸ்.. சிறுவனின் உடல்நிலை எப்படி?

