எதிர்காலத்தில் ராஜ்ஜியங்களுக்கு இடையிலான போர்களில் கூட செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்தும் எனக் கூறப்படுகிறது. இதனை சாத்தியப்படுத்துவதற்கான மிக முக்கிய கச்சா பொருள் உக்ரைனிடம் உள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் 3-வது ஆண்டை நெருங்குகிறது. இதில் உக்ரைனால் பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள் மூலம் எடுக்கப்பட்ட மில்லியன் மணிநேரத்துக்கும் மேலான காட்சிகள் உள்ளன. இந்த காட்சிகளைக் கொண்டு புதிய ஏஐ மாதிரியை பழக்கப்பட்டுத்த முடியும் என்கின்றனர்.
ஏற்கெனவே நடந்துவரும் போரில் இலக்குகளை அடையாளம் காணவும், மனிதர்களை விட வேகமாக புகைப்படங்களை ஆராயவும் ஏஐ பயன்படுத்தப்பட்டு வருகிறது.

2 மில்லியன் மணிநேர காட்சிகள்!
உக்ரைனின் போர் முனைகளில் 15,000-க்கும் மேலான ட்ரோன் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. இவற்றை ஒருங்கிணைக்கவும் இவற்றின் வீடியோ பதிவுகளை ஆராயவும் OCHI என்ற லாபநோக்கமற்ற நிறுவனம் உதவுகிறது. இதன் நிறுவனர் ஒலெக்சாண்டர் டிமிட்ரிவ் கூறுவதன்படி, இவர்களது அமைப்பு 2 மில்லியன் மணிநேரங்களுக்கான அதாவது 228 ஆண்டுகள் நீளமான போர் காட்சிகளை கைவசம் வைத்துள்ளது.
இந்த காட்சிகள் ஏஐயை பழக்கப்படுத்துவதற்கான அளவு தரவுகளை விட அதிகமானதாகவே இருக்குமென்கின்றனர்.

