கார்த்தி நடித்த ‘சகுனி’ படத்தை இயக்கிய சங்கர் தயாள், தற்போது அவர் ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில் யோகிபாபுவை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கியுள்ளார்.
‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’படத்தின் பிரெஸ் மீட் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில், அதில் கலந்துகொள்ள வந்தபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
அதனையடுத்து, உடனடியாக கொளத்தூர் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்ற நிலையில், வரும்போதே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர் .
சங்கர் தயாளின் மறைவு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
|
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

