இதனைத் தொடர்ந்து, 2016 – 17 ஆம் ஆண்டில் புணே அணிக்காக விளையாடிய அஸ்வின், அங்கும் ரூ. 7.50 கோடியே வாங்கினார். 2018 – 19ல் பஞ்சாப் அணியில் ரூ. 7.60 கோடியும், 2020 – 21ல் தில்லி அணியிலும் ரூ. 7.60 கோடியே வாங்கினார். தொடர்ந்து, 2022 முதல் 2024 வரையில் ராஜஸ்தான் அணியில் இருந்த அஸ்வின், ரூ. 5 கோடி பெற்று வந்தார்.
இந்த நிலையில், வரவிருக்கும் 2025 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் மீண்டும் சென்னை அணியிலேயே விளையாடவிருக்கும் அஸ்வின், இந்த முறை ரூ. 9.75 கோடி சம்பளம் பெற்றுள்ளார். இவர், இதுவரையில் ஐபிஎல் சீசன் மூலம் பெற்றுள்ள மொத்த சம்பளம் ரூ. 97 கோடியே 24 லட்சம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 38 வயதான சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இதுவரை மொத்தமாக 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுவரை அதிகபட்சமாக 11 முறை தொடர்நாயகன் விருதை வென்றுள்ளார்.
மைந்த்ரா, பாம்பே ஷேவிங் கம்பெனி, மன்னா ஃபுட்ஸ், அரிஸ்டோக்ராட் பேக்ஸ், ஓப்போ, மூவ், ட்ரீம் 11 முதலானவற்றில் ஒப்பந்தம் செய்யப்பட்டதன் மூலமும் அஸ்வின் சம்பாதித்து வருகிறார்.

