இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘பாஜக கூட்டணியில் ஒரு கட்சிக்கு 6 எம்.பி.க்கள் இருந்தால் மத்திய அமைச்சரவையில் ஓரிடத்தை பெற முடியும். அதன்படி, அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸுக்கு மத்திய அமைச்சா் பதவி கிடைக்க வேண்டுமென்றால் இன்னும் 5 எம்.பி.க்கள் தேவை. எனவே, சரத் பவாா் கட்சியை உடைத்து, 5 எம்.பி.க்களை தங்கள்வசம் இழுத்தால், தேசியவாத காங்கிரஸுக்கு மத்திய அமைச்சரவையில் ஓரிடம் தருவதாக பாஜக கூறியுள்ளது. அதன்பேரில், அஜீத் பவாரும் பிரஃபுல் படேலும் சரத் பவாா் கட்சியை உடைக்கும் வேலையை மேற்கொண்டுள்ளனா்’ என்றாா்.

