அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்மீத் கே தில்லானை, நீதித்துறையில் சிவில் உரிமைகளுக்கான உதவி அட்டர்னி ஜெனரலாக பரிந்துரைத்திருக்கிறார்.
இது தொடர்பாக ட்ரம்ப் தன் Truth Social பக்கத்தில், “அமெரிக்க நீதித்துறையில் சிவில் உரிமைகளுக்கான உதவி அட்டர்னி ஜெனரலாக ஹர்மீத் கே. தில்லானை பரிந்துரைப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். டார்ட்மவுத் கல்லூரி, வர்ஜீனியா பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் பட்டம் பெற்றவர். அமெரிக்க நான்காவது சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தராகப் பணிபுரிந்தவர்.

